வாலாஜா,

வாலாஜா ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்தவர் ஜாகீர். இவரது மனைவி முன்னி (வயது30) மும்பையில் உள்ள இவருடைய உறவினர்கள் செலினா(30) மகள்கள் அனம்(15), அதினா(7) ஆகியோர் விருந்துக்கு வந்திருந்தனர்.

இன்று காலை தேவதானத்தில் உள்ள ஏரிக்கு முன்னி, செலினா, அதினா, அனம் ஆகிய 4 பேரும் குளிக்க சென்றனர். அப்போது சிறுமி அதினா தண்ணீரில் இறங்கி குளித்தார். ஆழமான பகுதிக்கு சென்றவர் திடீரென தண்ணீரில் மூழ்கினார்.
இதனை கண்ட முன்னி, செரினா, அனம் ஆகியோர் அதினாவை காப்பாற்ற தண்ணீரில் குதித்தனர். சிறுமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட அவர்களும் ஆழமான பகுதியில் சிக்கி தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஏரியில் மூழ்கி தேடிய போது 4 பேரின் உடல்களும் மீட்கபட்டன.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -