- Back to Home »
- சங்கரன்கோவில் இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்
அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிப்பு
சென்னை,
சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த செ.கருப்பசாமி உடல்நிலை நலிவுற்று இறந்தார். காலியாக இருந்த அந்த சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது,. கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அத்தொகுதியில் அ.தி.மு.க.வே மீண்டும் களம் இறங்குகிறது.
எனவே, அத்தொகுதியின் வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்ற பரப்பரப்பாக தொண்டர்கள் கவனித்து வந்தனர். இந்நிலையில் அ.தி.மு.க. வேட்பாளராக முத்துச்செல்வி என்பவரை அறிவித்துள்ளார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா.