கடந்த 13-09-2011 அன்று தெய்வீகத் திருமகன் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் சிலையை அவமதிப்பு செய்தவர்களில் ஒருவனான செல்வம் ராஜபாளையம் மதுபான கடையில் வேலைபார்ப்பவன் என்ற செய்தி கிடைத்துள்ளது. அதை அறிந்த மக்கள் காவல்துறையிடம் முறையிட்டும் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லையென தெரிகிறது. அதையடுத்து இரண்டு நாளாக காவல்துறையை நம்பிய பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து இன்று மாலை
மீண்டும் சாலைமறியலில் ஈடுபட்டு காவல்துறைக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதன் தொடர்பாக முக்குலத்தோர் மக்கள் கட்சி தலைவர் திரு.தேவ காசிமய பாண்டியன் அவர்களை தொடர்பு கொண்டபோது " சிலையை அவமதித்தவன் வீட்டைச் சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.காவல் துறையினரின் செயல்பாடு திருப்தியில்லாததால் ராஜபாளையம் மக்கள் கொதித்துப் போயுள்ளனர். இந்த நிலை நீடித்தால் எங்களின் குணத்தை காட்ட வேண்டியிருக்கும் " என்று  கோபமாக தெரிவித்தார்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -