சென்னை,

தேமுதிக சார்பில் மே தின விழா சென்னை கோயம்பேட்டில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. 

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேசிய முற்போக்கு தொழிற்சங்கப் பேரவையின் கொடியினை ஏற்றி வைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இனிப்புகளும், இலவச சீருடையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி எஸ். இராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தொழிற்சங்கப் பேரவை துணை செயலாளர்கள் எம். சௌந்திரபாண்டியன், எஸ். ஈஸ்வரன், பி. வேணுராம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.



- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -