- Back to Home »
- வள்ளலார் »
- கருங்குழியில் வள்ளல் பெருமான் (1858 - 1867)
சென்னையின் நகரச் சூழலில் தன் இளமைக் காலத்தை கழித்த வள்ளல் பெருமான், 1858ல் சென்னையை விட்டு கிளம்பி சிதம்பரம் வருகிறார். இதன் பிறகு அவர் சென்னைக்கு திரும்பியதாக தெரியவில்லை. ஏன் சென்னையை விட்டு கிளம்பினார் என்பதற்கும் தெளிவான காரணங்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களை தரிசிக்க புனித யாத்திரையாக அவர் சென்னையை விட்டு கிளம்பியதாக ஒரு தகவல் நமக்குக் கிடைக்கிறது.