புதுடெல்லி,

சூரிய மண்டலத்தில் உள்ள முக்கிய கிரகங்களில் செவ்வாய் கிரகமும் ஒன்று. தற்போது இது சூரியனையும், பூமியையும் நெருங்கி வருகிறது. நேற்று செவ்வாய் கிரகம் சூரியனுக்கு நேர் எதிரே காணப்பட்டது. நாளை அது பூமிக்கு எதிரே 10 கோடி கி.மீ. தொலைவில் நெருங்குகிறது.

இதனால் நாளை செவ்வாய்க்கிரகம் மேலும் பிரகாசமாக தெரியும். இந்த அதிசய காட்சியை வெறும் கண்ணால் பார்க்கலாம். ஏப்ரல் மாதம் வரை இந்த அபூர்வ காட்சி தெரியும். அடுத்து 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ந்தேதி தொடங்கி 14-ந்தேதி வரை பூமியை நெருங்கும் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -