நாமக்கல், 
 நாமக்கல் அருகே அமைச்சர் தங்கமணியின் பாதுகாப்புக்காக வந்த ஜீப் விபத்தில் சிக்கியது. இதில் எஸ்ஐ உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர்.

திருமண நிகழச்சி ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு தங்கமணி பள்ளிப்பாளையம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அவரது காருக்கு முன்னால் போலீஸ் ஜீப் சென்றுகொண்டிருந்தது. அந்த ஜீப் எதிரே திருச்சியை நோக்கி சென்றுகொண்டிருந்த வேன் ஒன்றின் மீது மோதியது. இதில் ஜீப்பில் இருந்த எஸ்ஐ வீராசாமி, டிரைவர் பெரியசாமி, ஆல்பர்ட், முத்து என 4 பேர் காயமடைந்தனர். அதேபோன்று அந்த வேனில் வந்த 8 பேரும் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் நாமக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -