சென்னை : கூடங்குளம் அணுஉலை விவகாரத்தில், மாநில அரசு சார்பில் வல்லுனர் குழு அமைக்கப்பட உள்ளது. அப்பகுதி மக்களின் உணர்வுகள் மற்றும் அச்சம் குறித்து அக்குழு அறிக்கை அளிக்கும். அக்குழுவின் அறிக்கையின்படி, மாநில அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஏற்கனவே, மத்தியக்குழு மற்றும் மாநிலக்குழு இயங்கிவரும் நிலையில், மூன்றாவதாக மற்றொரு வல்லுனர் குழு அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.