- Back to Home »
- விஜயகாந்த் பொங்கல் விழா
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் விழா சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை கழகத்தில் கொண்டாடப்பட்டது
. இவ்விழாவில் தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் . பிரேமலதா கலந்து கொண்டனர்
. உடன் மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மகளிரணியினர் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழா நாதஸ்வர மங்கள இசையுடன் துவங்கியது
. அதைத் தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய கலைகளான ஒயிலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் மற்றும் நாட்டுப்புறப் பாடல்கள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
.
இவ்விழாவில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்து ஜாதி, மத பேதமின்றி சமத்துவப் பொங்கலாக கொண்டாடினர்.