நேற்றைய தினம் வழக்கமாக கீழத்தூவல் கிராமத்தில் நடைபெறவிருந்த ஐவர் திருநாள் பல்வேறு காரணங்களுக்காக நடைபெறாமல் போனது. அதன் பொருட்டு கீழத்தூவல் கிராம மக்களால் மட்டுமே ஐவர் திருநாள்
கொண்டாடப்பட்டது. எனினும் கீழத்தூவல் நிகழ்வை சென்னை வேளச்சேரியில் நடத்திக் காண்பித்ததே தாய்ப்புலிகளின் சிறப்பு. சரியாக 7:30 மணிக்கு விழா தொடங்கியது. நூற்றுக்கணக்கான பெண்களும் இளையோரும், குழந்தைகளும்  பல்வேறு கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டு வரிசையாக தீப ஒளி காணிக்கையை செலுத்தினர் (அதில் ஒரு பகுதியை படமாக இணைத்துள்ளோம்)  இந்நிகழ்ச்சியை சிறப்புற நடாத்த மக்கள் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட திரு . ராஜா (முக்குலத்தோர் ஒருங்கிணைப்பு விழிப்புணர்வு இயக்கம் ) திரு .சொக்கலிங்கம் (பார்வர்ட் பிளாக் - சைதை பகுதி தலைவர்) திரு . ஜெயவேல் (பாரதிய ஜனதா - துணைத்தலைவர்  தென் சென்னை ) அவர்களுக்கு தாய்ப்புலிகளின் சார்பில் நன்றி செலுத்தப்பட்டது.















































- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -