தான் நினைக்கிற ஒருவரின் புத்தியை முற்றாக பேதலிக்கச் செய்திடும் தீவிரத் தன்மை வாய்ந்தது இந்த பேதனம் எனும் மாந்திரிக கலை. எந்த காரணத்திற்காக இந்த கலையினை சித்தர் பெருமக்கள் கைகொண்டார்கள் என்பதற்கான சரியான விளக்கங்கள் நான் தேடிய வரையில் கிட்டவில்லை. விவரம் அறிந்தவர்கள் விளக்கினால் நன்றியுடையவளாயிருப்பேன். பேதன முறைக்கான யந்திரம் கீறுவதைப் பற்றி கருவூரார் தனது பாடலில் பின்வருமாறு விளக்குகிறார்.