கொள்கையின் அடிப்படையில் வள்ளல் பெருமானுக்கு எதிர்நிலையின் நின்றவர்களில் முதன்மையானவரான ஆறுமுக நாவலரின் சுயசரிதையானது “ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சரித்திரம்” என்னும் பெயரில் எழுதப் பட்டிருக்கிறது. இதனை அவரது சகோதரரின் மகனான யாழ்ப்பாணம் நல்லூர் த. கைலாசபிள்ளை என்பவர் எழுதியிருக்கிறார். இதன் முதற்பதிப்பு நள வருடம் 1916 மார்கழி மாதம் சென்னை ஆறுமுகநாவலர் வித்தியாநுபாலன அச்சகத்தில் அச்சிடப்பட்டது.