- Back to Home »
- கருவிகள் »
- இரசவாதத்தில் யந்திரங்கள் - அவியந்திரம்
இரசவாதத்தில் தனி சரக்குகளை அவித்து பயன்படுத்தும் முறை உள்ளது. இரண்டு அவித்தல் முறைகள் பயன்பாட்டில் உள்ளன. முதலாவது முறையில் பாத்திரத்தில் நீர் அல்லது மூலிகை சாறினை ஊற்றி அதில் நேரடியாக சரக்கினை இட்டு வேக வைப்பது ஒரு முறை, மற்றொரு முறை நீர் அல்லது மூலிகை சாறு சரக்குகளின் மீது படாமல் அவற்றின் நீராவியில் வேக வைப்பது.
இந்த இரண்டாவது வகை அவித்தலுக்கு பயன்படும் உபகரணமே அவியந்திரம் எனப்படுகிறது.