குடியாத்தம்

குடியாத்தம் நெல்லுர்பேட்டை கோயில் தேரில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் பலியாகியுள்ளனர்,
குடியாத்தம் நெல்லுர்பேட்டை கருப்பூலிஸ்வரர் கோயில் தேர் திருவிழா 2 ந்தேதி இரவு நடைபெற்றது,கடும் மழை என்பதால் தேர் சற்று தாமதமாகவே புறப்பட்டது,

இந்நிலையில் ஜோதி பள்ளி அருகே இரவு 11.15 க்கு தேர் வரும்போது உயர்
அழுத்த மின்சாரம் தாக்கியதில் 100 க்கு மேற்பட்டோருக்கு மின்சாரம் தாக்கியதில் பலர் மயக்கமடைந்தனர்,


தேர் வடம் இரும்பினால் செய்யபட்டிருந்திதனால் மின்சாரம் எளிதில் அனைவரையும் தாக்கியது,
இதில் ஈழதமிழரசன்(24)
கார்த்திக்(19)
வில்வநாதன்(55)
புனிதா(32)
விக்னேஷ்(19)
ஆகியோர் இறந்துள்ளனர்,இவர்கள் அனைவரும் நெல்லுர்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள்.
20 க்கு மேற்பட்டோர் குடியாத்தம்,மற்றும் வேலுர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்,


- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -