சென்னை,
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் தனி பாதுகாப்பு அதிகாரிகள் மூவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
பாண்டியன், கணேசன் மற்றும் வினோதன் ஆகியோருக்கு சொந்தமான 6 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நிலமோசடி மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் 
 மீது அதிமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரிகள் 3 பேர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தி வருவது பரபரப்பை 
ஏற்படுத்தியுள்ளது.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -