சென்னை,




மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க இந்த வருடம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டில் இதுவரை மாணவரின் புகைப்படம் ஒட்டப்பட்டிருக்கும். ஆள்மாறாட்டம் செய்யும் மாணவர்கள் ஹால்டிக்கெட்டில் உள்ள படத்தை அகற்றிவிட்டு ஆள்மாறாட்டம் செய்து தேர்த வாய்ப்பு இருந்தது.

இந்த மோசடியை தடுக்க மாணவரின் புகைப்படம் ஸ்கேன் செய்யப்பட்டு அது ஹால்டிக்கெட்டில் இடம் பெற்றுள்ளது. இந்த புதிய முறை முதல் முதலாக இந்த வருடம் 8-ந் தேதி தொடங்க உள்ள பிளஸ்-2 தேர்விலும் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி தொடங்க உள்ள எஸ்.எஸ்.எல்.சி.தேர்விலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் ஹால் டிக்கெட்டுகள் அனுப்பிவைக்கப்பட்டன. இந்த வருடம் முதல் முதலாக பிளஸ்-2 மாணவர்களுக்கும், எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு மாணவர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய மார்க் சான்றிதழ் வழங்கப்பட உள்ளதையும். ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் வரவேற்றுள்ளனர்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -