அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர்.கைது




சென்னை



 குடிபோதையில் தகராறு செய்ததாக, அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர். டிரைவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்

.தமிழக வருவாய் த் துறை அமைச்சராக இருப்பவர் செங்கோட்டையன். இவரது அரசியல் உதவியாளர் ஆறுமுகம், இவர், மயிலாப்பூர், அப்பு தெருவில் உள்ள கோவர்த்தனன் என்பவர் வீட்டில் வசித்து வருகிறார்.
  நேற்று இரவு, ராஜசேகருடன் ஆறுமுகம் தனது வீட்டிற்கு சென்றுள்ளனர். இருவரும் மது போதையில் இருந்துள்ளனர்
. அப்போது, வீட்டு உரிமையாளர் கோவர்த்தனனின் மனைவி சசிகலாவிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது
.இதுகுறித்து கோவர்த்தனன், மயிலாப்பூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், ஆறுமுகம் மற்றும் ராஜசேகர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -