10-ம் வகுப்பு வினா-விடை புத்தகம்
நாளை சென்னையில் கிடைக்கும்

சென்னை,

இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் முதன் முதலாக நடைபெற உள்ளது.

 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 4-ந்தேதி தொடங்க இருக்கும் நிலையில் இந்த புத்தகம் நாளை (வியாழக் கிழமை) முதல் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 4 இடங்களில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

சைதாப் பேட்டை, சூளைமேடு ஆகிய இடங்களில் உள்ள ஜெய் கோபால் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியிலும் சேத்துப்பட்டு ஹாரிங் கடேன் சாலையில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியிலும், புரசைவாக்கம் ஈ.எல்.எம். பேப்ரிஷியஸ் மேல்நிலைப் பள்ளியிலும் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ், ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 4 பாடங்களுக்கான மாதிரி வினா புத்தகம் ரூ.50-க் கும், கணிதப் பாடப்புத்தகத்திற்கான வினாத்தாள்கள் மற்றும் தீர்வுகள் அடங்கிய புத்தகம் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்படும். ஆங்கில வழி கணித மாதிரி வினாத்தாள், தீர்வுகள் அடங்கிய புத்தகத்தின் விலை ரூ.85 மற்ற 4 பாடங்களுக்கான ஆங்கில வழி மாதிரி வினா புத்தகத்தின் விலை ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 36 வினியோக மையங்களில் இந்த புத்தகம் கிடைக்கும். முதல் கட்டமாக 50 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. தேவைக் கேற்ப இந்த புத்தகங்கள் கூடுதலாக அச்சிடப்படும்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -