மட்டக்களப்பில் விவேகானந்தரின் சிலை உடைப்பு

தென் தமிழீழம், ஆரையம்பதி எல்லையில், எரிபொருள் நிரப்பு மையத்திற்கு முன்னால் இருந்த சுவாமி விவேகானந்தரின் முழுஉருவச்சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது.
.இச் சம்பவம் காரணமாக காத்தான்குடி ஆரையம்பதி எல்லையில் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு வேளையில் விஷமிகளால் இச்சம்பவம் மேற்கொள்ளப்படடிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.