சென்னை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை காரணமாக கேரளாவில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. கேரள அரசை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக பொதுச் செயலாளர் ஹெச். ராஜா தெரிவி்ததுள்ளார்.



முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இரு மாநில எல்லையிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. கேரளாவில் தமிழர்களின் உடைமைகள் சேதப்படுத்தப்படுவதும், தமிழகத்தில் மலையாளிகளின் உடைமைகள் சேதப்படுத்துவதும் அன்றாட நிகழ்வாகிவிட்டது. இரு மாநிலங்களிலும் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக பொதுச் செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது,

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையால் தமி்ழகம் மற்றும் கேரளா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இத்தனை நடந்தும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது துரதிஷ்டவசமானது.

கேரள மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. முல்லைப் பெரியாறு அணை இருக்கும் இடுக்கி மாவட்டத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். கேரள அரசை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மதரஸாக்களுக்கு கல்வி உரிமை கட்டண சலுகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். அவர் அறிவித்தது போன்று சலுகை அளிக்கக்கூடாது என்றார்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -