வேலைநிறுத்தம்,  சாலைமறியல் , கடையடைப்பு , தீக்குளிப்பு, கடைகள் உடைப்பு , போக்குவரத்து நிறுத்தம், 10 ஆயிரம் மக்கள் பேரணி, தீ வைப்பு, உண்ணா விரதம் ,  உருவ பொம்மை எரிப்பு , காவல்துறையின் அடக்கு முறைக்கு எதிரான போராட்டம்,  25 ஆயிரம் மக்கள் , 1 லட்சம் மக்கள் அப்படியே வளர்ந்து சுமார் 3 லட்சம் மக்களுக்கும் மேலாக , திரளாக கேரளாவில் பலிகடாவாக்கும் இன மக்களை காக்கவும் , அணையை கைப்பற்றவும், இடுக்கியை மீண்டும் தமிழகத்தோடு இணைக்கவும் பல்வேறு வடிவங்களில்  போராடிக் கொண்டுள்ளவேலையில், ஒரு மாபெரும் எழுச்சியை " எல்லாம் அரசியல், எல்லாம் முன்னேற்பாடு" என்ற கோணத்தில் பார்க்கவும் நம்பவும் போதுமான ஆதாரங்கள் நம்மிடம் இருக்கின்றது.



                                          கேரளாவில் எஸ்டேட்டுகளில் கொள்ளை, சூறை என்று சொல்லும் கேரளத்தார்கள் ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே ஏலக்காய் போன்ற பயிரிட்டவைகளை அறுவடை செய்து பதுக்கியது உண்மை அறிந்தவர்களுக்கு தெரியும். கேரளா மற்றும் தமிழக பணம்படைத்த கொளுத்த வியாபாரிகள் முன்கூட்டியே உசார்படுத்தப்பட்டுள்ளனர். அங்கே நடக்கு யாவும் வெளிவுலகம் போகக்கூடாதென்ற எண்ணத்தில் ஊடகங்களை முடக்கும் செயலில் திறம்பட செயல்பட்டு வருகிறது ஒரு குழு. அவிழ்ப்பது யாரை வைத்து , அடக்குவது யார் மூலம் என்ற மாபெரும் சதி இந்த பெரியாற்றுப் பிரச்சனைக்கு பின் இருப்பது புலனாகிறது.ஆகவே,

                                         இந்த சதியையும் , மக்களின் போராட்டத்தையும் வைத்து  லாபமீட்டும் ஆதாயம் பெரும் அரசியல் கட்சிகளை , நிறுவனங்களை மக்கள் புரிந்துகொண்டு , சதிகளுக்கு பலியாகவண்ணம் நமது இனப் போராட்டத்தை தொடர வேண்டும் " என்று தேவர் தொலைக்காட்சியின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,
பூங்கதிர்வேல்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -