முல்லை பெரியாற்று உரிமையை நிலைநாட்டவும் , பெரியற்றுச் சதியில் ஈடுபடும் கேரளா மற்றும் மத்திய அரசை கண்டித்தும் மேலூரில் கடையடைப்பு, வேலை நிறுத்தம் மற்றும் ஊர்வலம் நடத்தப்பட்டது.



மதுரை மாவட்டம் மேலூரில் முல்லை பெரியாற்றை உடைத்து புதிய அணை கட்டப்போவதாக மிரட்டும் கேரளா அரசைக் கண்டித்தும் , உச்சநீதிமன்றம் பலகட்டங்களில் ஆராய்ந்து வெளியிட்ட ஆணையை உதாசீனப் படுத்தி இந்திய அரசையே அவமானப்படுத்திய ஆணவப்போக்கையும் கண்டித்து 10.11.2010 அன்று ஒருநாள் கடையடைப்பு ,ஊர்வலம் மற்றும் வேலை நிறுத்தத்தை தேவரின பாதுகாப்புக் கழகம் ஒருங்கிணைத்து செயல்படுத்தினர். இந்த நிகழ்வில் அனைத்து சங்கங்களும் கலந்துகொண்டனர்.

தேவரின பாதுகாப்பு பேரவை சார்பாக அதன் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சிவ.கலைமணி , தலைமை நிலையச் செயலாளர் ஆண்டிச்சாமி, இளையோர் அணிச்செயலாளர் மாணிக்கம், துணைச்செயலாளர் பாண்டி , மேலூர் ஒன்றியச் செயலாளர் மதன் குமார், மேலூர் நகர் செயலாளர் இளவரசு , மாநில அமைப்புச் செயலாளர் கருப்பையா மற்றும் தேவரின பாதுகாப்பு பேரவை தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டு போராட்டத்தை வலுப்படுத்தினர்.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -