தமிழ் உரிமை மீட்பு இயக்கம் சார்பாக நூல் வெளியீட்டு விழா மற்றும் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம்


தமிழ் உரிமை மீட்பு இயக்கம் சார்பாக நூல் வெளியீட்டு விழா மற்றும் தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம் இன்று மாலை 5:30  மணிக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமக் குடியிருப்பு (எம்.எம்.டி.ஏ) முதன்மை சாலை , அரும்பாக்கத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியை திரு அ.சி.சின்னப்பத்தமிழர் தலைமை தாங்க , புலவர்கள் முத்து எத்திராசன் , அரியலூர் அரங்க நாடன் ,
வே.பிரபாகரன் , கி.தா.பச்சையப்பன் , இளந்திரையன், வீர அரசு ஆகியோர் முன்னிலையில் செஞ்சி செ.இரவி வரவேற்புரையோடு நிகழ்ச்சி ஆரம்பித்து . திரு இசைப்பாவலர் நா.நந்தன் தொடக்கவுரையாற்றினார். தமிழாண்டு பிறப்பு சித்திரையா? தையா? எனும் தலைப்பில் புலவர் கதிர் முத்தையன் அவர்களும் , அணுவுலை எச்சரிக்கை எனும் தலைப்பில் திரு தியாகு அவர்களும் , வெண்மணி முதல் பரமக்குடி வரை எனும் தலைப்பில் திரு குமரன் அவர்களும் ,மூன்று தமிழர் உயிர் மீட்ப்பு எனும் தலைப்பில் நா.மு.தமிழ்மணி அவர்களும் , தேசிய இனச் சிக்கல் எனும் தலைப்பில் திரு.தணிகை மைந்தன் அவர்களும், சமச்சீர் கல்வி எனும் தலைப்பில் பாக்கம் தமிழன் அவர்களும் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் திரு. காளிதாஸ் அவர்கள் தனது கருத்தான பேச்சை மீண்டும் பதித்தார். திரு கதிர் ஒளி அவர்களின் நன்றி உரையோடு நிகழ்வு இரவு 10:15 மணிக்கு  நிறைவடைந்தது.