பதினாறு வகையான தரிசனங்கள் இருப்பதாக அகத்தியர் அருளியிருக்கும் செய்தியினை நேற்றைய பதிவில் பார்த்தோம். இந்த தரிசனங்கள் ஒவ்வொன்றும் படி நிலையாக அருளப் பட்டிருக்கிறது. அதாவது ஒவ்வொரு தரிசனமாய் அனுபவித்து அறிந்திட வேண்டும் என்கிறார். இவை யாவும் அகத்தியர் தனது சீடரான புலத்தியருக்கு அருளியதாக கூறப்பட்டிருக்கிறது. முறையான வழி நடத்துதலில் முயற்சிக்கும் எவருக்கும் இந்த தரிசனங்கள் சாத்தியமாகும்.