அகப்பேய் சித்தர்





"உன்னை அறிந்தக்கால் - அகப்பேய்
ஒன்றையும் சேராயே
உன்னை அறியும்வகை- அகப்பேய்
உள்ளது சொல்வேனே".

"நாச மாவதற்கே - அகப்பேய்
நாடாதே சொன்னேனே
பாசம் போனாலும் - அகப்பேய்
பசுக்களும் போகாவே".

"ஐந்துதலை நாகமடி - அகப்பேய்
ஆதாயங் கொஞ்சமடி
இந்த விடந்தீர்க்கும் - அகப்பேய்
எம் இறை கண்டாயே".

- அகப்பேய் சித்தர் -

”நான்” என்ற அகந்தையை பேயாக உருவகித்து பாடியதால், இவர் அகப்பேய் சித்தர் என்று அழைக்கப் பட்டார்.