புண்களை குணமாக்கும் மேற்பூச்சு



உடலில் ஏற்படும் புண்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஒரு மருந்தினை அகத்தியர் அருளியிருக்கிறார். இதனை காயங்களின் மீது மேற் பூச்சாக பூசி வந்தால், எல்லா வகையான புண்களும் ஆறிவிடுமாம். இந்த தகவல் அகத்தியர் அருளிய "அகத்தியர் இரணவைத்தியம்" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.


முருங்கை யிலையும் முன்னையுந் தும்பையும்
அரிக்கையும் நீலியும் அத்தியும் வேம்புடன்
எருக்குஞ் செருப்படி பேயத்தி வேலியும்