"காணபதம்" அல்லது கணாபத்யம் என்றழைக்கப் படும் மரபின் தனிப் பெருங் கடவுளான விநாயகரின் அவதார தினம் இன்று. ஒவ்வொரு வருடம் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி திதி விநாயகரின் அவதார தினமாக கொண்டாடப் படுகிறது. ஆறு வெவ்வேறு வழிபாட்டு மரபுகள் ஒன்றிணைந்து இந்து மதமாய் உருவெடுத்த போது விநாயகர் இந்து மதத்தின் முழு முதற் கடவுளாக அங்கீகரிக்கப் பட்டார்.
ஓம்காரத்தின் சூட்சும வடிவம்தான் விநாயகர் என்று சொல்வோரும்