சைவ சமய குரவர்களான அப்பர், சம்பந்தர், சுந்தர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு அடுத்த நிலையில் வைத்து போற்றக் கூடிய தகுதியுடையவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் என்பது பலரும் அறியாத செய்தி. சைவ சமய மீட்டுருவாக்கத்திலும், தமிழின் வளர்ச்சிக்கும் தன் வாழ் நாளெல்லாம் தளராது உழைத்த பெருமகனார் என்றால் மிகையில்லை. இத்தனை சிறப்புகள் வாய்ந்த மனிதரைப் பற்றிய விவரங்களை ஒரு பதிவில் சுருக்குவது என்பது சாத்தியமில்லாத