நேற்றைய பதிவில் நாம் உட் கொள்ளும் உணவு ஜீரணமாகிய பின்னர், எஞ்சிய கழிவுகள் எவ்வாறு மலமாக வெளியேறுகிறது என்பதை பார்த்தோம்.
நமது சிறு குடலில் இருந்து பெருங்குடலுக்கு வரும் கழிவில் இருக்கும் நீரானது சமயங்களில் அதிக அளவில் உறிஞ்சப் பட்டுவிடும் போது மலமானது இறுகி மலக்குடலில் தேங்க ஆரம்பித்து விடும். இத்தகைய சமயத்தில் மூச்சையடக்கி முக்கி மலத்தை வெளியேற்றும் நிலை உண்டாகிறது. இதனையே மலச் சிக்கல்