திருநங்கையின் புதிய அரசியல் கட்சி அடடே கொள்கைகள்


1. 40 சதவீதம் ஆண்களுக்கு இட ஒதுக்கீடு
2. 40 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு
3. 3 சதவீதம் திருநங்கைகள் இட ஒதுக்கீடு
4. திருமணம் என்பது சீரியசான விஷயம் அல்ல
5. ஓரினச்சேர்கையாளர்கள் மற்றும் திருநங்கை, ஆண், பெண்களின் பாலியல் உரிமைகளை பெற்றுதருதல்
5. இந்திய அளவில் கட்சியை தொடங்குதல்
6. ஆட்சியை பிடித்தல்
இப்படி போகிறது கட்சியின் கொள்கைகள் இன்னும் 2 முதல் 5 மாதத்தில் கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளார் திருநங்கை ரோஸ்.
இந்தியாவில் ஆண்கள் ஒரே மனைவியுடன் வாழ்வதாக சொல்கின்றனர். ஆனால் ஒவ்வொரு ஆணுக்கும் பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. அவர்கள் நாடகமாடுகின்றனர். திருமணம் என்பது சீரியாசான விஷயம் அல்ல. பாலியல் உரிமைகளை பெற்றுத்தருவது. அதுவும் சுதந்திரமான பாலியல் உரிமைகள். ஒத்த கருத்துள்ளவர்கள் ஒன்று சேரலாமாம் யாருக்கு விருப்பம் இருக்கிறதோ. அவர்கள் தங்கள் விருப்பத்தை ரோஸ் வெங்கடேசன் என்ற பேஸ்புக்கில் ஆலோசனை சொல்லலாம். விருப்பப்பட்டால் அவருடன் இணைந்து கொள்ளலாம். பாலியல் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் அடிப்படை உரிமைகள். அவை மதம் என்ற போர்வையில் சமூகம் என்ற போர்வையில், சட்டமாக்கப்படுகிறது. இதனால் பாலியல் இன்பங்களை சுதந்திரமாக அனுபவிக்கஇயலாமல், பாலியல் மைனாரிட்டி மக்கள் அவஸ்த்தை படுகின்றனர் என்பதே இக்கட்சியை ரோஸ் துவங்க காரணம் என்கிறார். அவர் கஸ்டம் அவருக்கு....