மும்பை பங்குச்சந்தையில் இன்று ஏற்றத்துடன் வர்த்தகம் நிறைவடைந்தது. வர்த்தக முடிவின்போது பங்குவர்த்தகக் குறியீட்டெண் சென்செக்ஸ் 52.83 புள்ளிகள் அதிகரித்து 17,636.80 புள்ளிகளானது. இன்றைய வர்த்தகத்தில் சன் பார்மா, ஜிந்தால் ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, எல் அண்ட் டி, என்டிபிசி, பார்தி ஏர்டெல், எஸ்பிஐ, டாடா ஸ்டீல், எச்டிஎஃப்சி வங்கி, விப்ரோ, மாருதி சுஸுகி, இந்துஸ்தான் யூனிலீவர், ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபம் அடைந்தன.

டிஎல்எஃப், ஓஎன்ஜிசி, பஜாஜ் ஆட்டோ, டாடா பவர், கோல் இந்தியா, ஐடிசி, கெயில் இந்தியா, டிசிஎஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.

தேசிய பங்குச்சந்தையில் குறியீட்டெண் நிஃப்டி 19.60 புள்ளிகள் அதிகரித்து 5359.35 புள்ளிகளானது.

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -