சங்கரன்கோவிலில் மார்ச் 14ல் முதல்வர் ஜெயலலிதா பிரசாரம்

சென்னை

சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்காக, முதல்வர் ஜெயலலிதா வரும் மார்ச்   14ல் சங்கரன்கோவிலில் பிரசாரம் செய்யவுள்ளார். சென்னையில் இருந்து முதல்வர் வரும் ஹெலிகாப்டர், தரை இறங்குவதற்கு வசதியாக திருவேங்கடம் தனியார் பள்ளி, தேவர்குளம் மற்றும் ராஜபாளையம் தனியார் இடங்களிலும் "ஹெலிபேடுகள்' அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஹெலிபேடிலும் எஸ்.ஐ., தலைமையில் ஆயுதம் தாங்கிய போலீசார் 10 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.