காவல்துறையினர் சாமி பட ஹிரோ போல் நடந்துகொள்கின்றர்
உண்மை அறியும் குழு குற்றசாட்டு

சென்னை


மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின் தலைவர் மார்க்ஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்,
வேயச்சேரியில் நடைபெற்ற என்கவுன்டர் வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் நிலவிவருகிறது காவல்துறையினர் போதுமான விளக்கங்களையோ ஆதாரங்களையே இதுவரை மக்களுக்கு அளிக்கவில்லை
குற்றவாளிகள் என்று கூறபட்டவர்களை உயிரோடு பிடித்திருக்கலாம்
சமீக காலமாக தமிழகத்தில் நிலவி வரும் பிரச்சனைகளை திசை திருப்ப இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக நினைக்கிரோம் சம்பவ இடத்தில் மனித உரிமைகள் குழு சார்பில் சென்றபோது மக்கள் அமைதியாக தகவல்களை தந்து கொண்டிருந்தபோது
திடீர் என அங்கு சிலர் வந்து எங்களை வெளியேற்ற முயற்ச்சி செய்தனர் காவல்துறையினருக்கு தகவல் அளித்த பின்பும் இந்தநிலை நீடித்தது,
என்கவுன்டர் நடைபெற்றவுடன் சம்மந்தபட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யபட்டு நீதிமன்றத்தில் தற்காப்புக்காதான் சுட்டோம் என நிருபிக்கவேண்டும் என்று சட்டம் தெளிவாக கூறுகிறது,
சட்டமீறல்களைதான் தொடர்ந்து காவல்முறை செய்துவருகிறது ,
பொதுவாக நடிகர்கள் காவல்துறை அதிகாரிகளை பார்த்து படத்தில் நடிப்பார்கள் ஆனால் இப்போது
காவல்துறையினர் விக்ரம் நடித்த சாமி போல தங்களை நினைத்து செயல்பட்டுவருகின்றனர் வழக்கை சி,பி,ஜ க்கு மாற்றவேண்டும்,
என்கவுன்டரில் சம்மந்தபட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யபடவேண்டும்,பரிசுகள்,பதவி உயர்வுகள் வழங்க கூடாது, உடன் வழக்கறிஞர் சையது அப்துல்காதர்,நிர்மலா கொற்றவை,சந்திரா,சுகுமாறன்,கல்விமணி,ரஜினி,மதுமிதா தத்தா உள்ளிட்ட பலர் இருந்தனர்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -