சித்தர்களின் பாடல்களின் வழியே பயணித்தால், இறைநிலை என்பதை எவரும் எய்திடக் கூடிய ஒன்றாகவே புரிந்து கொள்ள முடியும். மேலும் இந்த பாடல்களில் இறை நிலை பற்றிய தேவையற்ற கற்பனா வாதங்களோ, மிகைப்படுத்திய புகழுரைகளையோ, அலங்காரங்களையோ அநேகமாய் காண முடியாது. ஒரு சிலபாடல்கள் இதற்கு விதிவிலக்கு,இவைகூட பிற்காலத்தில் இடைச் செருகலாய் வந்திருக்கும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை.
சித்தர்களின் பார்வையில்