அகத்தியரின் பாய்ச்சிகை ஆரூடம் - 6,3,1 முதல் 6,6,6 வரையிலான பலன்களும், மின்னூலும்!.

6,3,1.

பெருகிடும் குடும்பந் தன்னில் வறுமையே மிகவுண்டாச்சு
குரும்பர்கள் கலகமாச்சு கோளாறு மூன்றோன்றாச்சு
உரிமையாய் செயவியாபாரம் உனக்கிப்போ நஷ்டமாச்சு
பொருளது அழிவதற்கு பொல்லாத பிணியுண்டாச்சு

உனக்கு ஆறும், மூன்றும், ஒன்றும் வீழ்ந்திருப்பது செய்தொழில் முடக்கமாகி வறுமை அதிகமாகும் என்பதை குறிக்கிறது. நோய் நொடியினால் கைப் பொருள் அழியும். தீயவர்களினால் வீணான பிரச்சினைகள் உருவாகும் என்கிறார்.
6,3,2.