இன்றைய நமது சமூகத்தில் நம்பிக்கையின் பேரால் நடக்கும் வியாபாரங்களில் முதலிடம் வகிப்பது வாஸ்து சாஸ்திரம் என்றால் மிகையில்லை. ஆட்சியில் இருப்பவர்களில் இருந்து அடுத்த வீட்டில் இருப்பவர் வரை இந்த வாஸ்து சாஸ்திர நம்பிக்கை பீடித்திருக்கிறது. நமது வீட்டில் ஒருவராவது இந்த வாஸ்து சாஸ்திரத்தின் பிடியில் சிக்கி காரியமாற்றியவர்களாக இருக்கக் கூடும்.வாஸ்து பற்றிய தகவல்கள் அதர்வண வேதத்தில் இருந்தே துவங்குகிறது.